என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தமிழை விட தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தெலுங்கில் அவர் நடிக்க வந்து இன்றுடன் 11 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
தமிழில் சிம்பு, த்ரிஷா நடித்து வெளிவந்த 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு வடிவமான 'ஏ மாய சேசவே' படம் தான் அவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படம். தனது காதல் கணவரான நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த படம். தமிழைப் போலவே தெலுங்கிலும் அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
அதன்பின் தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் அவர் நடித்துள்ளார். 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்திலும் கிளைமாக்சில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். ஆனால், தமிழில் அவர் கதாநாயகியாக அறிமுகமான 'பாணா காத்தாடி' படம் ஆகஸ்ட் 2010ல்தான் வெளிவந்தது.
தெலுங்கில் 11 வருடங்களை நிறைவு செய்ததை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “நன்றி கௌதம் மேனன் சார், என்னுள் ஏதோ இருக்கிறது எனப் பார்த்ததற்கு நன்றி. அது என்னவோ, எனக்குள் அதை நான் பார்த்ததில்லை. இதைப் படிக்கும் அனைவருக்கும் நன்றி, இந்த உலகத்தில் மிகவும் மகிழ்ச்சியான பெண்ணாக என்னை உருவாக்கியிருக்கிறீர்கள்,” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மேலும், படத்தின் தயாரிப்பாளர் மஞ்சுளா, அப்படத்தின் நாயகனும், தன்னுடைய கணவருமான நாகசைதன்யாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
சமந்தாவிற்கு பல சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து வருகிறார் சமந்தா.