பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் ஏப்ரல் 28ல் வெளிவந்த படம் 'பொன்னியின் செல்வன் 2'. இரண்டு வாரத்திற்குள்ளாக 300 கோடி வசூலைக் கடந்த படமாக அமைந்தது. தற்போது இப்படம் 3வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் 10 படங்கள் வெளிவந்தாலும், 3வது வாரத்திலும் வார இறுதி நாட்களில் பல தியேட்டர்களில் இப்படம் 70 சதவீதத்திற்கும் மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் முன்பதிவு நன்றாக உள்ளது.
முதல் பாகத்துடன் ஒப்பிடும் போது இப்படம் கொஞ்சமாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும் வசூலில் ஏமாற்றத்தைத் தரவில்லை. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படத்திற்கு சிறப்பான வரவேற்பு இருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் வரை இப்படம் தாக்குப்பிடித்து ஓடும் என்கிறார்கள். 400 கோடி வசூலைக் கடப்பது உறுதி, 500 கோடி வசூலைக் கடக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.