விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் ஏப்ரல் 28ல் வெளிவந்த படம் 'பொன்னியின் செல்வன் 2'. இரண்டு வாரத்திற்குள்ளாக 300 கோடி வசூலைக் கடந்த படமாக அமைந்தது. தற்போது இப்படம் 3வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் 10 படங்கள் வெளிவந்தாலும், 3வது வாரத்திலும் வார இறுதி நாட்களில் பல தியேட்டர்களில் இப்படம் 70 சதவீதத்திற்கும் மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் முன்பதிவு நன்றாக உள்ளது.
முதல் பாகத்துடன் ஒப்பிடும் போது இப்படம் கொஞ்சமாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும் வசூலில் ஏமாற்றத்தைத் தரவில்லை. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் படத்திற்கு சிறப்பான வரவேற்பு இருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் வரை இப்படம் தாக்குப்பிடித்து ஓடும் என்கிறார்கள். 400 கோடி வசூலைக் கடப்பது உறுதி, 500 கோடி வசூலைக் கடக்குமா என்பது இனிமேல்தான் தெரியும்.