தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

பத்து தல படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. இது அவரது 48வது படமாகும். இந்த படத்தில் கமல்ஹாசனும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், ரஜினிக்காக தான் உருவாக்கிய கதையில் சிம்புவை இயக்கப் போகும் தேசிங்கு பெரியசாமி, தற்போது இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு, ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே நடித்த பதான் படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரது சம்பளம் பல கோடிக்கு உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சிம்புவை பொறுத்தவரை 20 கோடி வரை தான் சம்பளம் வாங்கி வருகிறார். அந்த வகையில் இந்த படத்தில் தீபிகா படுகோனே சிம்புவை விட அதிகப்படியான சம்பளத்துக்கு ஒப்பந்தமாவார் என்றும் கூறப்படுகிறது.




