இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பத்து தல படத்தை அடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. இது அவரது 48வது படமாகும். இந்த படத்தில் கமல்ஹாசனும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், ரஜினிக்காக தான் உருவாக்கிய கதையில் சிம்புவை இயக்கப் போகும் தேசிங்கு பெரியசாமி, தற்போது இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அதோடு, ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே நடித்த பதான் படம் வெற்றி பெற்றதை அடுத்து அவரது சம்பளம் பல கோடிக்கு உயர்ந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சிம்புவை பொறுத்தவரை 20 கோடி வரை தான் சம்பளம் வாங்கி வருகிறார். அந்த வகையில் இந்த படத்தில் தீபிகா படுகோனே சிம்புவை விட அதிகப்படியான சம்பளத்துக்கு ஒப்பந்தமாவார் என்றும் கூறப்படுகிறது.