விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
நடிகை சம்யுக்தா மலையாள சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மொழிகளில் தற்போது பிஸியான கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிகர் சாய் தரம் தேஜ் உடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் விருபாக்ஷா. இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூலை நெருங்குகிறது. இவர் நடித்து தெலுங்கில் வெளிவந்த படங்கள் தொடர் வெற்றியடைவதால் தெலுங்கில் இவரை ராசியான கதாநாயகி என்று அழைக்கின்றனர்.
சமீபத்தில் சம்யுக்தா ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் உங்களுக்கு ரொம்ப கோபம் வருமாமே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியது ; "எனக்கு ஒரு சிலரின் நடவடிக்கை சில நேரங்களில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தும். ஒரு முறை நானும் என் அம்மாவும் வெளியே சென்றோம். அப்போது அங்கு ஒரு நபர் சிகரெட்டை பிடித்து அந்தப் புகையை எங்கள் மீது விட்டுக் கொண்டிருந்தார். எனக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது. அதனால் அவர் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறை விட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.