'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி | பிளாஷ்பேக்: சினிமாவில் சிவகுமாரின் 60வது ஆண்டு: தீராத அந்த இரண்டு ஏக்கங்கள் | ராணாவை நள்ளிரவில் எழுப்பிய கட்டப்பா ; 'ராணா நாயுடு' வெப் சீரிஸுக்கு வித்தியாசமான புரமோஷன் |
நடிகை சம்யுக்தா மலையாள சினிமா மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மொழிகளில் தற்போது பிஸியான கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிகர் சாய் தரம் தேஜ் உடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் விருபாக்ஷா. இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூலை நெருங்குகிறது. இவர் நடித்து தெலுங்கில் வெளிவந்த படங்கள் தொடர் வெற்றியடைவதால் தெலுங்கில் இவரை ராசியான கதாநாயகி என்று அழைக்கின்றனர்.
சமீபத்தில் சம்யுக்தா ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் உங்களுக்கு ரொம்ப கோபம் வருமாமே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியது ; "எனக்கு ஒரு சிலரின் நடவடிக்கை சில நேரங்களில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தும். ஒரு முறை நானும் என் அம்மாவும் வெளியே சென்றோம். அப்போது அங்கு ஒரு நபர் சிகரெட்டை பிடித்து அந்தப் புகையை எங்கள் மீது விட்டுக் கொண்டிருந்தார். எனக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது. அதனால் அவர் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறை விட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.