அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மாநாடு படத்தில் வித்தியாசமான திரைக்கதை மற்றும் மேக்கிங் மூலமாக தனது படத்திற்கான ரசிகர் வட்டத்தை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்தநிலையில் அவர் முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் நுழைந்துள்ளது, தெலுங்கு இளம் ஹீரோ நாகசைதன்யாவை கதாநாயகனாக வைத்து கஸ்டடி என்கிற படத்தை இயக்கியுள்ளது, அந்த படம் தமிழில் வெளியாக இருப்பது என எல்லாமாக இந்த புதிய படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அது மட்டுமல்ல சமீபத்தில் வெளியான டிரைலர் கூட அந்த எதிர்பார்ப்பை கூட்டவே செய்துள்ளது.
ஆனால் இந்த டிரைலரை வைத்து எதுவுமே முடிவு செய்து விட வேண்டாம், படம் இன்னும் வேறு மாதிரி இருக்கும் என்று கூறியுள்ளார் வெங்கட் பிரபு. அது மட்டுமல்ல, இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் நாகசைதன்யா பேசும்போது, 'இந்த படம் ஆரம்பத்தில் மெதுவாகத்தான் நகரும்.. 40வது நிமிடத்தில் வேகமெடுக்கும் படம் இறுதிவரை ஒரே அதிரடியாக இருக்கும். குறிப்பாக பின்னணி இசையுடன் கூடிய ஆக்சன் காட்சிகளை பார்க்கும் ரசிகர்கள் நிச்சயமாக எங்களுடைய கஸ்டடிக்குள் வந்து விடுவார்கள்” என்று கூறியுள்ளார்.