'கருப்பு' ரிலீஸ் - அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆர்ஜே பாலாஜி | 'தாய் கிழவி' ரிலீஸ் ஒத்தி வைப்பு ஏன் ? | பிளாஷ்பேக்: முரணான தலைப்பு, முத்தான வெற்றி, முயற்சித்து சாதித்த இயக்குநர் கே பாக்யராஜ் | 'சூர்யா- 46' படத்தின் டைட்டில், ரிலீஸ் குறித்த தகவல் வெளியானது! | பிளாஷ்பேக்: வாள்வீச்சு நாயகன் ரஞ்சனின் வெள்ளித்திரை வரவுக்கு வித்திட்ட “ரிஷ்யசிருங்கர்” | கவர்ச்சி மூலம் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்த கயாடு லோஹர்! | 'வாரணாசி' படப்பிடிப்பை ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ள ராஜமவுலி! | 'வித் லவ்' ஹீரோவை பாராட்டிய விஜய் தேவரகொண்டா | குடியிருந்த கோயில், அண்ணாமலை, சிங்கம் 3 - ஞாயிறு திரைப்படங்கள் | காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு |

மாநாடு படத்தில் வித்தியாசமான திரைக்கதை மற்றும் மேக்கிங் மூலமாக தனது படத்திற்கான ரசிகர் வட்டத்தை இன்னும் அதிகப்படுத்திக் கொண்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்தநிலையில் அவர் முதன்முறையாக தெலுங்கு திரையுலகில் நுழைந்துள்ளது, தெலுங்கு இளம் ஹீரோ நாகசைதன்யாவை கதாநாயகனாக வைத்து கஸ்டடி என்கிற படத்தை இயக்கியுள்ளது, அந்த படம் தமிழில் வெளியாக இருப்பது என எல்லாமாக இந்த புதிய படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அது மட்டுமல்ல சமீபத்தில் வெளியான டிரைலர் கூட அந்த எதிர்பார்ப்பை கூட்டவே செய்துள்ளது.
ஆனால் இந்த டிரைலரை வைத்து எதுவுமே முடிவு செய்து விட வேண்டாம், படம் இன்னும் வேறு மாதிரி இருக்கும் என்று கூறியுள்ளார் வெங்கட் பிரபு. அது மட்டுமல்ல, இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் நாகசைதன்யா பேசும்போது, 'இந்த படம் ஆரம்பத்தில் மெதுவாகத்தான் நகரும்.. 40வது நிமிடத்தில் வேகமெடுக்கும் படம் இறுதிவரை ஒரே அதிரடியாக இருக்கும். குறிப்பாக பின்னணி இசையுடன் கூடிய ஆக்சன் காட்சிகளை பார்க்கும் ரசிகர்கள் நிச்சயமாக எங்களுடைய கஸ்டடிக்குள் வந்து விடுவார்கள்” என்று கூறியுள்ளார்.