கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் மாவீரன். அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைக்கும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது வரும் ஜூலை 14 அன்று இப்படம் வெளியாகிறது.
இந்த படத்தை குறித்து இப்பட ஒளிப்பதிவாளர் வித்து அயனா பகிர்ந்துள்ளார். அதன்படி, "மாவீரன் படம் மண்டேலா படத்தை விட பல மடங்கு பெரிய படமாக உருவாகியுள்ளது. ஒரு சில முக்கிய காட்சிகளை 3D Rig என்ற தொழில்நுட்பத்தின் மூலம் எடுத்துள்ளோம். அதேபோல், விக்ரம் படத்தின் இடைவெளி காட்சிக்கு பயன்படுத்திய MOCOBOT கேமராவை இந்த படத்தில் சீனா சீனா பாடலுக்கு பயன்படுத்தியுள்ளோம். இந்த படத்தின் படப்பிடிப்பில் தினமும் 50 பேர் முதல் 200 பேர் வரை நடித்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.