இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கி உள்ள பிசாசு 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. அதன் பிறகு மாளிகை, கா உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். திரையுலகில் நடிகை, பாடகி என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியா, இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.
தற்போது அவர் பூடான் நாட்டுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஆண்ட்ரியா, ஒரு பதிவும் போட்டிருக்கிறார். அந்த பதிவில், பூடான் நாட்டில் அனுபவிக்க மூன்று விஷயங்களை உள்ளன. இமயமலையின் ராஜ்ஜியத்தையும் அதன் நிலப்பரப்புகளையும் கண்டுகளிக்கலாம். இங்கு நடை பயணத்தின் மூலம் சுத்தமான காற்றை அனுபவிக்க முடியும். பௌத்த பூமியான இந்த பூடானில் ஆன்மிகத்தை உணர முடிகிறது. இப்படி ஒரு மறக்க முடியாத பயணம் கிடைத்தமைக்கு நன்றி என அவர் பதிவிட்டுள்ளார்.