20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
வெற்றிமாறன் இயக்கிய வட சென்னை படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கி உள்ள பிசாசு 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. அதன் பிறகு மாளிகை, கா உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். திரையுலகில் நடிகை, பாடகி என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியா, இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.
தற்போது அவர் பூடான் நாட்டுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அது குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஆண்ட்ரியா, ஒரு பதிவும் போட்டிருக்கிறார். அந்த பதிவில், பூடான் நாட்டில் அனுபவிக்க மூன்று விஷயங்களை உள்ளன. இமயமலையின் ராஜ்ஜியத்தையும் அதன் நிலப்பரப்புகளையும் கண்டுகளிக்கலாம். இங்கு நடை பயணத்தின் மூலம் சுத்தமான காற்றை அனுபவிக்க முடியும். பௌத்த பூமியான இந்த பூடானில் ஆன்மிகத்தை உணர முடிகிறது. இப்படி ஒரு மறக்க முடியாத பயணம் கிடைத்தமைக்கு நன்றி என அவர் பதிவிட்டுள்ளார்.