என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
சினிமா உலகில் 100 கோடி வசூல் என்பதுதான் சில வருடங்களுக்கு முன்பு வரை ஒரு 'டார்கெட்' ஆக இருந்தது. அது இப்போது 1000 கோடி வசூல் என மாறிவிட்டது. 'பாகுபலி 2, டங்கல், கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் அப்படி 1000 கோடி வசூலித்ததே அதற்குக் காரணம்.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் இன்னும் 600 கோடி வசூலைத் தாண்ட முடியாமல் உள்ளது. அப்படி 600 கோடி வசூலைக் கடந்த படமாக ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த '2.0' படம் முதல் சாதனையைப் படைத்தது.
கடந்த வருடம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன் 1' 500 கோடி வசூலையும், 'விக்ரம்' படம் 400 கோடி வசூலையும் கடந்தது. 300 கோடி வசூலைக் கடந்த படங்களாக 'பிகில், வாரிசு' ஆகிய படங்கள் உள்ளன. 'பொன்னியின் செல்வன் 2' படமும் தற்போது 300 கோடி வசூலைக் கடந்த படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது. இவற்றில் சில படங்களின் வசூல்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவை. சில பாக்ஸ் ஆபீஸ்ட் வட்டாரத் தகவல் மட்டுமே.
'பொன்னியின் செல்வன் 2' கடந்த வருடம் வெளிவந்த முதல் பாகத்தின் வசூலான 500 கோடியைக் கடக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.