‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பிரபல தெலுங்கு சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'தீ' என்கிற டான்ஸ் ஷோ மூலம் நடன இயக்குநராக பிரபலமானவர் சைதன்யா. இவர் நடன நிகழ்ச்சிகள் மட்டுமின்றி, திரைப்படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். தனிப்பட்ட நடன ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் கிளப் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெரும் கடன் பிரச்சினையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலைக்கு முன்பு அவர் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் "எனது பெற்றோர், சகோதரி, சக டான்ஸ் மாஸ்டர்கள் மற்றும் நடனக் கலைஞர்களை மன்னிக்க வேண்டும். பணப்பிரச்சினையை சமாளிக்க முடியாமல் இப்படி ஒரு முடிவை எடுக்கிறேன். இதனை சமாளிக்க எவ்வளவோ முயன்றும் பலனில்லை" என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். சைதன்யாவின் மரணத்திற்கு, தெலுங்கு திரையுலகை சேர்ந்த, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலம் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.