டிரைலரிலும் சிவகார்த்திகேயனுடன் மோதும் கவின்! | மூன்றாவது முறையாக இணைந்த நானி - அனிருத் கூட்டணி | நாளை அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | 'புஷ்பா 2' படப்பிடிப்பு நிறைவு | காதல் குறித்த கேள்வி- கடுப்பான சுனைனா! | சூர்யாவுக்கு ஜோடியாகும் காஷ்மிரா பர்தேசி? | 'லெவன்' படத்திற்காக டி.இமான் இசையில் ஆங்கில பாடல் பாடிய ஸ்ருதிஹாசன்! | ஸ்டார் சேனல்கள் கட்டணம் உயர்வா? டிஸ்னி ஸ்டார் மறுப்பு | அஜித்துடன் மோதத் தயாராகும் விக்ரம்! | ரஜினியும், மணிரத்னமும் மீண்டும் இணைகிறார்களா? சுஹாசினி சொன்ன பதில் |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களான ஷேன் நிகாம், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் படப்பிடிப்பு தளங்களில் போதை பொருட்களை பயன்படுத்துவதாகவும், சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வருவதில்லை என்றும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் கூறி இரு நடிகர்களுக்கும் மலையாள தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் இணைந்து தடை விதித்தது. இந்த நிலையில் இரு நடிகர்களும் மலையாள நடிகர் சங்கத்தில் விளக்க கடிதம் கொடுத்துள்ளனர்
ஸ்ரீநாத் பாசி கொடுத்துள்ள கடிதத்தில், தன்னை சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டும் இனி சங்கத்தின் விதிமுறைகளின் படி நடப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.
ஷேன் நிகாம் எழுதியுள்ள கடிதத்தில் 'ஆர்டிஎக்ஸ்' படப்பிடிப்பு தடைபட்டது தனது தவறினால் அல்ல என்றும், உடல்நலக் குறைவால் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். போதை குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.