முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் |
தமிழ் சினிமாவின் இளம் கவர்ச்சி நடிகையான யாஷிகா ஆனந்த் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் என சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார். இவை அனைத்திலுமே யாஷிகாவை பல லட்சம் ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். இந்நிலையில், அவர் திடீரென டுவிட்டரை விட்டு வெளியேறுவதாக தனது இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். டுவிட்டரின் புதிய சிஇஓ எலான் மஸ்க் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு வழங்கப்படும் ப்ளூ டிக் மீதான கொள்கைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.
அதன்படி மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தும் எவரும் ப்ளூ டிக் பெற முடியும். அந்த தொகையை கட்டவில்லை என்றால் அங்கீகரிக்கப்பட்ட கணக்காக இருந்தாலுமே ப்ளூ டிக் நீக்கப்பட்டுவிடும். அந்த வகையில் நேற்று ஒரேநாளில் அரசியல் சினிமா, விளையாட்டு உள்ளிட்ட பல பிரபலங்களின் டுவிட்டர் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. நடிகை யாஷிகாவின் டுவிட்டர் ப்ளூடிக் நீக்கப்பட்டுவிட்டது.
இதனால் கடுப்பான யாஷிகா, 'நான் டுவிட்டரிலிருந்து வெளியேறுகிறேன். காசு கொடுத்து அங்கீகரிக்கப்பட்ட கணக்காக இருக்க முடியாது. டுவிட்டரிலிருந்து பிரபலங்கள் அனைவருமே வெளியேற வேண்டும். டுவிட்டரின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவில் பிரபலமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விராட் கோலி, எம்.எஸ்.தோனி, ஷாருக்கான் என பல பிரபலங்களின் டுவிட்டர் கணக்கின் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.