‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
திரைப்பட பாடலாசிரியர் சினேகன் தனது பெயரில் 'சினேகன்' என்ற அறக்கட்டளை நடத்தி வருகிறார். சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி 'சினேகம்' என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார். இரண்டுக்-கும் உள்ள பெயர் பொருத்தத்தை வைத்து நடிகை ஜெயலட்சுமி தனது பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெயலட்சுமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. “நன்கொடை பெற்று மோசடி செய்ததாக எந்தப் புகாரும் இல்லை. தெரியாத நபர்களிடம் இருந்து பணம் வசூலிக்கவில்லை. ஆதாரமே இல்லாமல் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்: என்று ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் வாதிட்டார்.
போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், ஜெயலட்சுமி மீதான பண மோசடி வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார். இதனை ஏற்ற நீதிமன்றம் ஜெயலட்சுமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.