அமீரகத்திற்காக சிறப்பு பாடல் உருவாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் | பிளாஷ்பேக்: வட்டார மொழி பேசி, வாகை சூடிய முதல் தமிழ் திரைப்படம் “மக்களைப் பெற்ற மகராசி” | சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் | ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சிம்பு | மண்டாடி படத்தில் படகு ரேஸ் வீரராக நடிக்கும் சூரி | 'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு |

திரைப்பட பாடலாசிரியர் சினேகன் தனது பெயரில் 'சினேகன்' என்ற அறக்கட்டளை நடத்தி வருகிறார். சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி 'சினேகம்' என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார். இரண்டுக்-கும் உள்ள பெயர் பொருத்தத்தை வைத்து நடிகை ஜெயலட்சுமி தனது பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் ஜெயலட்சுமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெயலட்சுமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. “நன்கொடை பெற்று மோசடி செய்ததாக எந்தப் புகாரும் இல்லை. தெரியாத நபர்களிடம் இருந்து பணம் வசூலிக்கவில்லை. ஆதாரமே இல்லாமல் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்: என்று ஜெயலட்சுமியின் வழக்கறிஞர் வாதிட்டார்.
போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், ஜெயலட்சுமி மீதான பண மோசடி வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார். இதனை ஏற்ற நீதிமன்றம் ஜெயலட்சுமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.




