கமல் சாரை பற்றி தப்பா பேசாதீங்க! - சர்ச்சை குறித்து ஆவேசமாக பேசிய சிவராஜ்குமார் | கார்த்தியின் 'கைதி- 2' படப்பிடிப்பு: டிசம்பர் மாதத்தில் தொடங்குகிறது! | அபிஷன் ஜீவிந்த் மூலம் எனக்கு கிடைத்த புகழ்! - சசிகுமார் நெகிழ்ச்சி | சூர்யா 45வது படம் பண்டிகை நாளில் வெளியாகும்! - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தகவல் | பெங்களூரு காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது புகார்! வழக்கை பதிவு செய்யாத போலீசார் | 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' வருமா? | ஹீரோயினை விட ஒரு பாடலுக்கு ஆடும் ராஷ்மிகாவுக்கு அதிக சம்பளம் | நிதிஅகர்வாலுடன் நடித்தால் துணை முதல்வரா? | எப்போதான் முடியும் ரவிமோகன் - ஆர்த்தி சண்டை? | 'தக்லைப்' படத்தில் போலீசாக வருகிறாரா திரிஷா? |
பாடலாசிரியர் சினேகன் - நடிகை கன்னிகா ரவி இருவரும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களது திருமணத்தை நடிகர் கமல்ஹாசன் நடத்தி வைத்தார். இந்த நிலையில் சினேகனின் மனைவி கன்னிகா கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த 25ம் தேதி அவர்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
இது குறித்து தகவலை இப்போது பகிர்ந்துள்ள சினேகன் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இறைவா நீ ஆணையிடு, தாயே எந்தன் மகளாய் மாற என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது. தாயே எந்தன் மகளாகவும் மகளே எங்கள் தாயாகவும் இரு தேவதைகள் 25- 1 -2025 அன்று நெகிழ்ந்து நிரம்பி வழிகிறது. உங்களின் தூய அன்பினால் எங்கள் வாரிசுகளை வாழ்த்துங்கள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.