பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
சின்னத்திரை நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மிகவும் பிரபலமடைந்துவிட்டார். கணவர் தினேஷுடனான சண்டையின் காரணமாக தனியே வசித்து வரும் ரச்சிதா, இப்போதெல்லாம் தனக்காக, தனது மகிழ்ச்சிக்காக மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருவதாக சமீபத்திய பதிவுகளில் தெரிவித்து வருகிறார். ஏற்கனவே, தனக்கு பிடித்தமான ராயல் என்பீல்ட் பைக் வாங்கில் அதில் அடிக்கடி ரைட் சென்று வரும் ரச்சிதா, தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். மோரிசன் கேரஜ் கம்பெனியின் சொகுசு ரக காரான அந்த காரின் விலை 22 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. கார் வாங்கிய ரச்சிதா, நண்பர்கள் ஷிவின், விஷ்ணு விஜய் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அதில் அவர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். ரச்சிதாவின் கடின உழைப்பை பாராட்டி சக நடிகர்கள் உட்பட ரசிகர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.