20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
யதார்த்தமான படங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் விதார்த். தற்போது அறிமுக இயக்குனர் மணிமாறன் நடராசன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக மிஸ் பெமினா பட்டம் வென்ற ரோஷினி பிரகாஷ் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்து, இறுதிகட்ட படபிடிப்பிற்கு படக்குழு தயாராகி வருகின்றனர். ஜிப்ரான் இசை அமைக்கிறார். கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். எம். ராகேஷ் பாபு தயாரிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்திற்கு 'வைப்பர்' என பெயரிட்டு அதற்கான டை்டில் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். “கண்ணாடி விரியன் பாம்பின் தன்மையையும், பண்பையும் கொண்டவர் தான் கதையின் நாயகன் என்பதால் வைப்பர் என திரைப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது” என்கிறார் இயக்குநர் மணிமாறன் நடராசன்.