புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
நடிகர் விதார்த் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெற்றி தோல்விகளை கடந்து, தற்போது சரத்குமார் உடன் இணைந்து ஒரு க்ரைம் த்ரில்லர் ஜானர் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விதார்த் நடிக்கும் மற்றொரு புதிய படத்தின் பூஜை படப்பிடிப்பு உடன் துவங்கியுள்ளது.
ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி உலகில் பல அற்புதமான திரைக்கதைகள் உருவாகியுள்ளன. அந்த வகையில் ஒரு கொலையில் தொடர்புடைய நான்கு பேரின் சூழலை ஹைபர்லிங்க்காக இணைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மர்டர் மிஸ்டரி கலந்த சைபர் லிங்க் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தை சகோ கணேசன் என்பவர் இயக்குகிறார்.
விதார்த் உடன் கலையரசன், சந்தோஷ் பிரதாப், தேஜூ அஸ்வினி, ஜான் விஜய், அதுல்யா சந்திரா, ஸ்வேதா தொரத்தி, ராதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ட்ரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஒயிட் ஹார்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அஜிஷ் அசோக் இசையமைக்கிறார். சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.