விஜயகாந்த் மகனின் உருக்கமான ஆசை | கர்ப்பிணி பெண்களின் பேஷன் ஷோவில் கலந்து கொண்ட அமலாபால் | மம்முட்டியை இயக்கும் கவுதம் மேனன் | சிவகார்த்திகேயனை இயக்க தயாராகும் சிபி சக்ரவர்த்தி | எனக்கு பிடித்த இடம் : நயன்தாரா | 'கூலி' படப்பிடிப்புக்கு முன்பாக ரஜினிகாந்த் சிறு ஓய்வு ? | திருச்செந்தூர், கன்னியாகுமரி கோயில்களில் கணவருடன் நயன்தாரா வழிபாடு | புதுமுகங்களின் 'குற்றம் புதிது' | கன்னட ஹீரோ மீது கொடூர தாக்குதல் | சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத் தலைவராக மங்கை அரிராஜன் வெற்றி |
பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக இயக்கிய ராஜமவுலி, அதையடுத்து ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கினார். 1000 கோடி வசூலித்த அப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த நிலையில் அடுத்தபடியாக மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். அமேசான் காடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக இயக்கிய ராஜமவுலி இந்த படத்தை மூன்று பாகங்களாக இயக்கப் போகிறாராம். அதோடு இப்படம் இந்து கடவுளான அனுமனை மையமாகக் கொண்ட கதையில் உருவாக இருக்கிறதாம். இதுவரை ராஜமவுலி இயக்கிய படங்களை காட்டிலும் கூடுதல் பட்ஜெட்டில் இந்தப்படம் உருவாக இருப்பதாகவும் டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.