தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
கன்னடத் திரையுலக நடிகரான ரிஷப் ஷெட்டி 'காந்தாரா' படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். அந்தப் படத்தின் முன்பாகமான 'காந்தாரா சாப்டர் 1' படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ளது. அந்தப் படத்தின் புரமோஷனுக்காக அவர் அளித்த பேட்டி ஒன்றில் அடுத்த நடிக்க உள்ள 'ஜெய் ஹனுமான்' படம் பற்றிய அப்டேட் ஒன்றைக் கொடுத்தார்.
“காந்தாரா : சாப்டர் 1 வெளியாகும் வரை எந்தப் படத்திலும் கமிட் ஆக விரும்பவில்லை. ஆனால் பிரசாந்த் வர்மாவின் ஸ்கிரிப்ட்டைக் கேட்ட பிறகு, உடனடியாக 'ஜெய் ஹனுமான்' படத்தில் கையெழுத்திட்டேன். பிரசாந்த் வர்மா ஒரு அற்புதமான ஸ்கிரிப்ட்டுடன் வந்தார், கதை மிகவும் சுவாரஸ்யமானது. நாங்கள் போட்டோஷூட்டை முடித்துவிட்டோம், ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் ஜெய் ஹனுமான் படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்குவதற்கான தேதியை நிர்ணயிப்போம்” என்றார்.
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடித்து கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படமான 'ஹனுமான்' 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.