இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
இயக்குனர் மாரி செல்வராஜ், நடிகர் தனுஷ் கூட்டணியில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான 'கர்ணன்' படம் நல்ல வரேற்பை பெற்று, வசூலையும் குவித்தது. சிலதினங்களுக்கு முன் மீண்டும் நடிகர் தனுஷூம் மாரிசெல்வராஜூம் இணையும் புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியானது. இப்படத்தை தனுஷின் உண்டர்பார் நிறுவனத்துடன் இணைந்து ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தயாரிப்பு பணியில் இறங்கி உள்ளார் தனுஷ்.
இந்நிலையில் இந்த படத்தை பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் தனுஷின் சினிமா கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகிற படம் என்கிறார்கள். மேலும் இந்த படத்தில் நடிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை மற்ற மொழிகளில் உள்ள சிறந்த வல்லுநர்களை அழைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்குகிறதாம். மாரி செல்வராஜிற்கு அலுவலகம் ஒன்றை அமைத்து கொடுத்து படத்தின் பணிகளை பார்க்கும்படி தனுஷ் கூறியுள்ளாராம்.