ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கவர்ச்சி நடிகையாக மட்டுமே பார்க்கப்பட்ட நடிகை ஷகீலாவை சக மனுஷியாக பார்க்க வைத்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. அந்நிகழ்ச்சிக்கு பிறகு ஷகீலா கனிவான இதயமும் கொண்டவர் என்பதை புரிந்து கொண்ட பலரும் அவருக்கு ரசிகர்களாகிவிட்டனர். சில யூ-டியூப் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் வலம் வரும் ஷகீலா, சில சமூக பிரச்னைகள் குறித்தும் பேசி வருகிறார். அவர் அண்மையில் தனது ஏரியாவில் நடந்த பிரச்னைக்காக வீதியில் இறங்கி போராடியுள்ளார்.
தனது ஏரியாவில் உள்ள ஒரு குடியிருப்பில் குடும்பமாக வசித்து வருபவர்களுக்கு ரூ.2500, பேச்சிலர்ஸ்களுக்கு ரூ.9000 என பராமரிப்பு செலவாக வசூலித்து வந்தனர். அந்த தொகை செலுத்தப்படாத காரணத்தால் 40க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கு தண்ணீர் இணைப்பை துண்டித்துள்ளனர். இதன்காரணமாக அந்த குடியிருப்பில் வசித்து வந்த பேச்சிலர்ஸ் உட்பட பலரும் வீதியில் போராடியுள்ளனர். இதுகுறித்து அறிந்த ஷகீலா இரவு நடந்து அந்த போரட்டத்தில் பேச்சிலர்ஸ்க்கு ஆதரவாக களமிறங்கி போரடியுள்ளார். தனக்கு சற்றும் தொடர்பில்லாத விவகாரத்தில் தன்னலமற்று மக்களுக்காக போரடிய ஷகீலாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.