பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி | காதல் பிரிவில் அர்ஜுன் தாஸ்? | வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! |

ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் புதிய படங்கள் வெளியாகும் போது அவற்றிற்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள இரண்டு மாநில அரசுகளும் அனுமதி அளிப்பது வழக்கம். முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால் அந்த உயர்வு அதிகமாகவே இருக்கும். இப்படி டிக்கெட் கட்டணங்களை உயர்த்தித்தான் தங்களது படங்கள் 500 கோடி, 1000 கோடி வசூலித்தது என சொல்லிக் கொள்கிறார்கள்.
நாளை மறுதினம் ரஜினிகாந்த், நாகார்ஜுனா நடித்துள்ள தமிழ்ப் படமான 'கூலி', ஹிருத்திக் ரோஷன், ஜுனியர் என்டிஆர் நடித்துள்ள ஹிந்திப் படமான 'வார் 2' ஆகிய படங்கள் தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியாக உள்ளன. இந்தப் படங்களுக்கான முன்பதிவு இன்னும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஆரம்பமாகவில்லை.
நேரடி தெலுங்கு படங்களைப் போல இந்த டப்பிங் படங்களுக்கும் டிக்கெட் கட்டண உயர்வுக்காக விண்ணப்பம் செய்துள்ளார்களாம். இது தெலுங்குத் திரையுலகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டப்பிங் படங்களுக்கு எதற்காக டிக்கெட் கட்டண உயர்வு தர வேண்டும் என்று சிலர் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளதாகச் சொல்கிறார்கள். தெலுங்கு நடிகர்களான நாகார்ஜுனா, ஜுனியர் என்டிஆர் ஆகியோர் நடித்திருந்தாலும் அனுமதி அளிக்கக் கூடாது என்கிறார்களாம்.
சென்னை, மும்பையை விட ஐதராபாத், விசாகப்பட்டிணம் என தெலுங்கு நகரங்களில் டிக்கெட் கட்டண உயர்வுக்கு ஏன் அனுமதி தர வேண்டும் என சமூக வலைத்தளங்களிலும் சில தெலுங்கு சினிமா ரசிகர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்.
டிக்கெட் கட்டண உயர்வுக்கு ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகள் அனுமதி அளிக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.




