மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
நடிகை திவ்யா கணேஷ் பாக்கியலெட்சுமி தொடரில் ஜெனி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதிகமாக சீரியல்கள் நடிக்கவில்லை என்றாலும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக சோஷியல் மீடியாக்களில் திவ்யாவுக்கு ரசிகர்கள் உள்ளனர். எந்தவொரு பிரச்னையையும் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டு வரும் திவ்யா, ஒரு முறை ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்த போது, திவ்யாவின் இடுப்பில் ஒரு நபர் கையை வைத்து சில்மிஷம் செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த திவ்யா, விமானத்தில் அந்த இடத்தில் வைத்தே அந்நபரின் கன்னத்தில் நாலு அறை கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை அண்மையில் பேட்டி ஒன்றில் கூறிய அவர், பெண்கள் இதுபோன்ற சம்பவங்களை சகித்துக்கொண்டு செல்லாமல் அப்போதே இதுபோன்ற அற்ப செயல் செய்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என அட்வைஸ் செய்துள்ளார். திவ்யாவின் தைரியமான இந்த செயலை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.