எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் | மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் உணவு பொருட்கள் விலை : உச்சநீதிமன்றம் ஆதங்கம் |

நடிகை திவ்யா கணேஷ் பாக்கியலெட்சுமி தொடரில் ஜெனி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதிகமாக சீரியல்கள் நடிக்கவில்லை என்றாலும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக சோஷியல் மீடியாக்களில் திவ்யாவுக்கு ரசிகர்கள் உள்ளனர். எந்தவொரு பிரச்னையையும் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டு வரும் திவ்யா, ஒரு முறை ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்த போது, திவ்யாவின் இடுப்பில் ஒரு நபர் கையை வைத்து சில்மிஷம் செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த திவ்யா, விமானத்தில் அந்த இடத்தில் வைத்தே அந்நபரின் கன்னத்தில் நாலு அறை கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை அண்மையில் பேட்டி ஒன்றில் கூறிய அவர், பெண்கள் இதுபோன்ற சம்பவங்களை சகித்துக்கொண்டு செல்லாமல் அப்போதே இதுபோன்ற அற்ப செயல் செய்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என அட்வைஸ் செய்துள்ளார். திவ்யாவின் தைரியமான இந்த செயலை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.