கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

நடிகை திவ்யா கணேஷ் பாக்கியலெட்சுமி தொடரில் ஜெனி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதிகமாக சீரியல்கள் நடிக்கவில்லை என்றாலும் முன்னணி நடிகைகளுக்கு இணையாக சோஷியல் மீடியாக்களில் திவ்யாவுக்கு ரசிகர்கள் உள்ளனர். எந்தவொரு பிரச்னையையும் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டு வரும் திவ்யா, ஒரு முறை ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு விமானத்தில் பயணம் செய்த போது, திவ்யாவின் இடுப்பில் ஒரு நபர் கையை வைத்து சில்மிஷம் செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த திவ்யா, விமானத்தில் அந்த இடத்தில் வைத்தே அந்நபரின் கன்னத்தில் நாலு அறை கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை அண்மையில் பேட்டி ஒன்றில் கூறிய அவர், பெண்கள் இதுபோன்ற சம்பவங்களை சகித்துக்கொண்டு செல்லாமல் அப்போதே இதுபோன்ற அற்ப செயல் செய்பவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என அட்வைஸ் செய்துள்ளார். திவ்யாவின் தைரியமான இந்த செயலை தற்போது பலரும் பாராட்டி வருகின்றனர்.