பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
மலையாளத்தில் நேரம், பிரேமம் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கி மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். சமீபத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் பிரித்விராஜ், நயன்தாராவை வைத்து இயக்கிய கோல்டு திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் தனது புதிய படம் ஒன்றை தமிழில் இயக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பையும் சமீபத்தில் அவர் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தனது புதிய படத்திற்கு தேவையான புதிய நடிகர்களை தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தும் விதமாக ஆடிசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன். இதற்கான தகுதியாக நடிப்பு, பாட்டு, டான்ஸ், ரீல்ஸ் வீடியோ, பெயிண்டிங் என எந்த அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் இது தமிழில் உருவாகும் படம் என்றாலும் எந்த மொழியை சேர்ந்தவர்களும், அவ்வளவு ஏன் 7 கண்டத்தில் உள்ளவர்களும் கூட இந்த ஆடிசனில் கலந்து கொள்ளலாம் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.
இதற்கு முன்னதாக அவர் நஸ்ரியா, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் என நான்கு கதாநாயகிகளை அறிமுகப்படுத்தி தென்னிந்திய திரையுலகத்திற்கு தந்தவர் என்பதால் இந்த புதிய படத்திலும் கதாநாயகிகள் மற்றும் புதிய நடிகர்களையும் நிச்சயம் அல்போன்ஸ் புத்திரன் உருவாக்குவார் என எதிர்பார்க்கலாம்.