நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
மலையாளத்தில் நேரம், பிரேமம் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கி மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். சமீபத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் பிரித்விராஜ், நயன்தாராவை வைத்து இயக்கிய கோல்டு திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் தனது புதிய படம் ஒன்றை தமிழில் இயக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பையும் சமீபத்தில் அவர் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தனது புதிய படத்திற்கு தேவையான புதிய நடிகர்களை தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தும் விதமாக ஆடிசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன். இதற்கான தகுதியாக நடிப்பு, பாட்டு, டான்ஸ், ரீல்ஸ் வீடியோ, பெயிண்டிங் என எந்த அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் இது தமிழில் உருவாகும் படம் என்றாலும் எந்த மொழியை சேர்ந்தவர்களும், அவ்வளவு ஏன் 7 கண்டத்தில் உள்ளவர்களும் கூட இந்த ஆடிசனில் கலந்து கொள்ளலாம் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.
இதற்கு முன்னதாக அவர் நஸ்ரியா, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் என நான்கு கதாநாயகிகளை அறிமுகப்படுத்தி தென்னிந்திய திரையுலகத்திற்கு தந்தவர் என்பதால் இந்த புதிய படத்திலும் கதாநாயகிகள் மற்றும் புதிய நடிகர்களையும் நிச்சயம் அல்போன்ஸ் புத்திரன் உருவாக்குவார் என எதிர்பார்க்கலாம்.