ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹிந்தி நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. தற்போது அட்லீ இயக்கி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் ஷாரூக். கடந்த 2021ல் மும்பையில் உள்ள கப்பல் ஒன்றில் போதை விருந்தில் கலந்து கொண்டார் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான். தடை செய்யப்பட்ட போதை பொருளை பயன்படுத்தியதாக கூறி அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அதன் பிறகு இந்த விவகாரத்தில் அவர் குற்றமற்றவர் என கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது.
ஆரியன்கான் விரைவில் இயக்குனராக அறிமுகமாக போவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அவர் புதிதாக மதுபான பிசினஸ் ஒன்றை தொடங்கி இருக்கிறார். இதனை விளம்பரப்படுத்தும் வகையில் சினிமா மற்றும் டிவி நடிகர் நடிகைகளுக்கு மும்பையில் அவர் ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார். அப்போது பல நடிகைகளுடன் ஆரியன்கான் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதைப்பார்த்து ஏற்கனவே போதை பொருள் வழக்கில் சிக்கிய ஆரியன்கானுக்கு இதுபோன்ற சரக்கு பிசினஸ் தேவையா? என்கிற கேள்விகளும் சோசியல் மீடியாவில் அவரை நோக்கி எழுந்து கொண்டிருக்கிறது.