நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்கிற தசை அழற்சி நோய் பாதிப்பில் இருந்து மீண்டு தற்போது 'சிட்டாடல்' என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது ஹாலிவுட்டில் தயாராகும் தொடர். அங்கு பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இந்தியன் வெர்ஷனில் சமந்தா நடிக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் சமந்தாவுக்கு சண்டை காட்சிகள் உள்ளன.
இந்த தொடருக்காக குதிரையேற்ற பயிற்சி செய்த சமந்தா. சண்டை பயிற்சியும் எடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த சண்டை காட்சியின்போது அவரது கைகளில் காயம் ஏற்பட்டது. அந்த படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சமந்தா “இதையெல்லாம் பார்த்து நான் அஞ்சப்போவது இல்லை.. எனது கையில் ஏற்பட்டுள்ள காயங்களை நான் ஆபரணமாக கருதுகிறேன்” என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.
ஏற்கெனவே 'தி பேமிலி மேன் 2' வெப் தொடரில் அதிரடி சண்டை காட்சியில் நடித்திருந்த சமந்தா. சமீபத்தில் வெளிவந்த 'யசோதா' படத்திலும் சண்டை காட்சிகளில் நடித்திருந்தார். இப்போது மீண்டும் தனது அதிரடி ஆக்ஷனை தொடங்கி இருக்கிறார். அடுத்து குஷி படத்திலும் நடிக்க உள்ளார். இவர் நடித்துள்ள சாகுந்தலம் படம் வெளியாக உள்ளது.