22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படம் பான் இந்தியா படமாக வெளியாகி 1000 கோடிக்கும் அதிகமா வசூலைக் குவித்தது. வெளிநாடுகளிலும் இப்படத்திற்குக் குறிப்பிடும்படியான வசூல் கிடைத்தது.
ஆஸ்கர் விருதுக்காக சிறந்த பாடல் பிரிவில் இப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் தேர்வாகியுள்ளது. அதற்கு விருது கிடைக்குமா என்பது இன்னும் இரண்டு வாரத்தில் தெரிந்துவிடும்.
இதனிடையே, அமெரிக்காவில் உள்ள “ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் அவார்ட்ஸ்” வழங்கும் திரைப்பட விருதுகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் நான்கு விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம், சிறந்த ஆக்ஷன் திரைப்படம், சிறந்த ஸ்டன்ட்ஸ், சிறந்த ஒரிஜனல் பாடல் ஆகிய நான்கு விருதுகளை அள்ளியுள்ளது. அந்த விருதுகளை ராம்சரண், ராஜமவுலி, கீரவாணி உள்ளிட்ட படக்குழுவினர் பெற்றுக் கொண்டார். அடுத்த சில நாட்களில் ‛ஆர்ஆர்ஆர்' குழுவினர் மார்ச் 12ம் தேதி நடைபெற உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளனர்.