இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த தெலுங்குப் படம் பான் இந்தியா படமாக வெளியாகி 1000 கோடிக்கும் அதிகமா வசூலைக் குவித்தது. வெளிநாடுகளிலும் இப்படத்திற்குக் குறிப்பிடும்படியான வசூல் கிடைத்தது.
ஆஸ்கர் விருதுக்காக சிறந்த பாடல் பிரிவில் இப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் தேர்வாகியுள்ளது. அதற்கு விருது கிடைக்குமா என்பது இன்னும் இரண்டு வாரத்தில் தெரிந்துவிடும்.
இதனிடையே, அமெரிக்காவில் உள்ள “ஹாலிவுட் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் அவார்ட்ஸ்” வழங்கும் திரைப்பட விருதுகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் நான்கு விருதுகளை வென்றுள்ளது.
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம், சிறந்த ஆக்ஷன் திரைப்படம், சிறந்த ஸ்டன்ட்ஸ், சிறந்த ஒரிஜனல் பாடல் ஆகிய நான்கு விருதுகளை அள்ளியுள்ளது. அந்த விருதுகளை ராம்சரண், ராஜமவுலி, கீரவாணி உள்ளிட்ட படக்குழுவினர் பெற்றுக் கொண்டார். அடுத்த சில நாட்களில் ‛ஆர்ஆர்ஆர்' குழுவினர் மார்ச் 12ம் தேதி நடைபெற உள்ள ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பங்கேற்க உள்ளனர்.