இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
மலையாள நடிகர் பஹத் பாசில் இரண்டு வருடங்களில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் புஷ்பா, விக்ரம் என மிகப்பெரிய வெற்றி படங்களில் நடித்து கிட்டத்தட்ட பான் இந்தியா நடிகர் என்கிற அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார். கன்னடத்தில் இருந்தும் அவரைத்தேடி பட வாய்ப்புகள் வருகின்றன. இந்த நிலையில் தற்போது வருமானவரித்துறையினர் அவர்களது சில சந்தேகங்களுக்கு பஹத் பாசிலை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி சம்மர் அனுப்பி உள்ளனர்.
குறிப்பாக பஹத் பாசில் ஒடிடியில் வெளியான படங்களில் நடிப்பதற்காக வாங்கிய அட்வான்ஸ் தொகை மற்றும் அவர் தயாரிப்பாளராக உள்ள தயாரிப்பு நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் ஆகியவற்றில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்பதற்காகவே அவருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி இதேபோன்று நேரிலேயே ஆஜரான மோகன்லாலிடமும் வருமான வரித்துறையினர் அவரது கணக்கு வழக்குகள் குறித்த சந்தேகங்களை கேட்டு அந்த விளக்கங்களை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.