Advertisement

சிறப்புச்செய்திகள்

ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி

12 மே, 2025 - 05:56 IST
எழுத்தின் அளவு:
Producer-dispute-ends,-reconciliation-Nivin-Pauly-returns-to-shooting

கடந்த சில நாட்களாகவே மலையாளத் திரை உலகில் பிரபல தயாரிப்பாளரான மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் குறித்த செய்தி தான் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவர் சமீபத்தில் ஒரு ஹீரோவின் பெயரை குறிப்பிடாமல் அவரைப் பற்றிய சில விஷயங்களை கூறியது மலையாள திரை உலகில் சலசலப்பை ஏற்படுத்தியது. தயாரிப்பாளர் சங்கத்தை தன் கட்டுப்பாட்டில் இவர் வைத்திருப்பதாக தொடர்ந்து கூறி வருபவரும், அதே சமயம் தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவருமான தயாரிப்பாளர் சான்ட்ரா தாமஸ், இவர் கூறியது நடிகர் நிவின்பாலியை தான் என்று திரியை கொளுத்தி போட்டார்.

இதனைத் தொடர்ந்து லிஸ்டின் ஸ்டீபனுக்கு நிவின்பாலி ரசிகர்கள் இடம் இருந்து எதிர்ப்பு வலுத்தது. அதே சமயம் நான் நிவின்பாலி பற்றி சொல்லவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார். அதேபோல கோவில் தரிசனத்திற்காக வந்திருந்த நிவின்பாலியிடம் இது பற்றி கேட்டபோது, யார் எது சொன்னாலும் இப்போது அது பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. இந்த கோவிலில் இருந்து நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருப்போம் என்று மட்டும் வேண்டிக் கொள்வோம் என்று பொத்தாம் பொதுவாக ஒரு பதில் சொல்லி சென்றார்.

இந்த சர்ச்சை இவ்வளவு பெரிதாவதற்கு காரணம் தற்போது லிஸ்டின் ஸ்டீபன் தயாரித்து வரும் பேபி கேர்ள் என்கிற படத்தில் நிவின்பாலி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு பாதி நடைபெற்று முடிந்த நிலையில் சில காரணங்களால் இடையில் நின்றிருந்தது. அதனால் நிவின்பாலி குறித்து தான் மறைமுகமாக தயாரிப்பாளர் இப்படி பேசியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிவின்பாலி தற்போது வைக்கமில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதன் மூலம் தயாரிப்பாளர், நிவின்பாலி இருவருக்கும் சமரச உடன்படிக்கை ஏற்பட்டு விட்டது தெரியவந்துள்ளது இந்த படத்தை அருண் வரமா என்பவர் இயக்கி வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம்காந்தாரா படப்பிடிப்பில் விபத்து ... தற்போதைய தமிழ் சினிமா இசை - அனுராக் காஷ்யப் கிண்டல் தற்போதைய தமிழ் சினிமா இசை - அனுராக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in