பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பெங்களூருவில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80வது பிறந்தநாளும், அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60வது பிறந்தநாளும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் ரஜினி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரஜினி, இந்த நாள் என்னை உருவாக்கிய இந்த தங்க இதயத்தில் தங்கமழை பொழிவதை பாக்கியமாக உணர்ந்தேன் . இறைவனுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

அண்ணனுக்கு தங்கமழை
தன் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டுக்கு தங்க நாணயங்களால் அபிஷேகம் செய்த படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்து ரஜினி கூறியுள்ளதாவது: என் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80வது பிறந்தநாளையும், அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60வது பிறந்தநாளையும் ஒரே நாளில் எனது குடும்பத்தினருடன் கொண்டாடியது மகிழ்ச்சி. என்னை இன்று இந்தளவு ஆளாக்கிய, இந்த தங்க இதயத்தில் தங்கமழை பொழிவதை பாக்கியமாக உணர்ந்தேன். நன்றி இறைவனே.
இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
