என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
பெங்களூருவில் ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80வது பிறந்தநாளும், அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60வது பிறந்தநாளும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் ரஜினி தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரஜினி, இந்த நாள் என்னை உருவாக்கிய இந்த தங்க இதயத்தில் தங்கமழை பொழிவதை பாக்கியமாக உணர்ந்தேன் . இறைவனுக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
அண்ணனுக்கு தங்கமழை
தன் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டுக்கு தங்க நாணயங்களால் அபிஷேகம் செய்த படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்து ரஜினி கூறியுள்ளதாவது: என் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80வது பிறந்தநாளையும், அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60வது பிறந்தநாளையும் ஒரே நாளில் எனது குடும்பத்தினருடன் கொண்டாடியது மகிழ்ச்சி. என்னை இன்று இந்தளவு ஆளாக்கிய, இந்த தங்க இதயத்தில் தங்கமழை பொழிவதை பாக்கியமாக உணர்ந்தேன். நன்றி இறைவனே.
இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.