'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
சென்னை: நடிகர் மயில்சாமி மறைவு இந்த சமூகத்திற்கு பெரும் இழப்பு, அவரின் ஆசையை நான் நிறைவேற்றுவேன் என அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபின் நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீடு திரும்பும் வழியில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட அவரது உயிர் பிரிந்தது. சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். பலர் நேரில் சென்று அஞ்சலியும் தெரிவித்தனர்.
இன்று(பிப்., 20) காலையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்; ‛‛மயில்சாமியை எனக்கு இளம் வயதிலேயே தெரியும், அவர் எனது நீண்டகால நண்பரும்கூட . அவர் எம்ஜிஆர் ரசிகர், சிவபக்தர். என்னை சந்திக்கும் போது அவர் அடிக்கடி இருவரை பற்றிதான்பேசுவார். அவருடன் அதிக படங்களை நடிக்க முடியவில்லை. வாய்ப்பு இல்லாமல் போனது. அவர் அடிக்கடி திருவண்ணாமலைக்கு செல்வார். அங்கிருந்தபடியே என்னிடம் போனில் பேசுவார்.
சில நாட்களுக்கு முன்பு 3 முறை தொடர்பு கொண்டார். ஆனால் என்னால் போனை அட்டண்ட் பண்ண முடியவில்லை. பேச முடியலன்னு சாரி கேட்கணும்னு இருந்தேன். மறந்துட்டேன், திரைப்பட உலகில் விவேக், மயில்சாமி ஆகிய இருவரது இழப்பு திரையுலகிற்கு மட்டுமல்ல. இந்த சமூகத்திற்கு இழப்பு. இருவரும் சிந்தனைவாதிகள், சமூக அக்கறைவாதிகள். நான் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்ய அவர் ஆசைப்பட்டதாக கூறினார். நிச்சயம் ஆசையை நிறைவேற்றுவேன்.
மயில்சாமியின் இறப்பு தற்செயலாக நடக்கவில்லை. ‛இது அவனுடைய கணக்கு'. சிவன் அவருடைய சிறந்த பக்தரை கூட்டிட்டு போயிட்டார். இவரது வாரிசுகள் எதிர்காலத்தில் நல்லபடியாக இருக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு ரஜினி கூறினார்.