இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழ் நடிகர்கள் தெலுங்குப் பக்கமும் தங்களது பார்வையை தற்போது திருப்பியுள்ளனர். தெலுங்கில் நேரடியாக நடிக்காமல் தங்களது தமிழ்ப் படங்களை அங்கு டப்பிங் செய்து வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை விரிவாக்க நினைத்தனர். ஆனால், டப்பிங் படங்களுக்கு பெரிய அளவில் தெலுங்கு ரசிகர்கள் ஆதரவு தரவில்லை. அந்த விதத்தில் விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோர் ஏமாற்றமடைந்தார்கள். ஆனால், தனுஷ் நேரடி தெலுங்குப் படத்தில் நடித்து அங்கு தனது தடத்தைப் பதித்துள்ளார்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் அவர் நடித்த 'வாத்தி' படம் தெலுங்கில் 'சார்' என்ற பெயரில் வெளியானது. படத்திற்கு ரசிகர்களது வரவேற்பு சிறப்பாக இருந்ததால் அங்கு மூன்று நாட்களிலேயே படம் 15 கோடி வசூலைக் கடந்துள்ளது. சுமார் 6 கோடிக்கு விற்கப்பட்ட படம் நிகர வசூலாக 8 கோடியை வசூலித்துவிட்டதாம். மூன்றே நாட்களில் தனுஷின் படம் தெலுங்கில் லாபத்தை ஈட்டியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
அதே சமயம் தமிழில் மூன்று நாட்களில் 12 கோடிக்கும் கூடுதலாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் லாபத்தைப் பெற இன்னும் 10 கோடி வரை வசூலித்தாக வேண்டுமாம். இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் இல்லாததால் எப்படியும் சமாளிக்க வாய்ப்புள்ளது என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.