தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
துல்கர் சல்மான் தற்போது மலையாளத்தில் கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் கிங் ஆப் கோத என்கிற படத்தில் நடித்து வருகிறார். மலையாள திரையுலகின் பிரபல சீனியர் இயக்குனரான ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மலையாள இளம் முன்னணி நடிகர்களில் ஒருவரான டொவினோ தாமஸ் கிங் ஆப் கோத படப்பிடிப்பிற்கு விசிட் அடித்துள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
அதே சமயம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு முறை இதேபோல இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு வருகை தந்தார் டொவினோ தாமஸ். தற்போது மீண்டும் அவர் இந்த படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருப்பதை பார்க்கும்போது இந்த படத்தில் அவரும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரோ என்கிற யூகங்கள் சோசியல் மீடியாவில் கிளம்பியுள்ளன. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குறூப் என்கிற படத்திலும் சில நிமிடங்களே வந்து செல்லும் கதாபாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.