புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
வாரிசு நடிகர்கள் என்றாலும் நடிகர் துல்கர் சல்மானும், நாக சைதன்யாவும் தங்களது திறமையால் தங்களுக்கென அவரவர் சார்ந்த திரையுலகில் நிலையான ஒரு இடத்தை பிடித்துள்ளனர். அதிலும் துல்கர் சல்மான் தற்போது மலையாளம் தாண்டி பான் இந்தியா நடிகர் என சொல்லும் வகையில் அனைத்து மொழி படங்களிலும் சீரான இடைவெளியில் நடித்து வருகிறார். அதேபோல நாகசைதன்யாவும் வெங்கட்பிரபுவின் கஸ்டடி படத்தில் நடிப்பதன் மூலமாக நேரடியாக தமிழுக்கு வர இருக்கிறார். பொதுவாகவே துல்கர் சல்மான் சென்னைக்கு வந்தால் அடிக்கடி விக்ரம் பிரபுவை சந்திப்பதால் அவர்கள் மட்டுமே நண்பர்கள் என்பது போன்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் துல்கர் சல்மானும் நாக சைதன்யாவும் சென்னையில் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தபோது நண்பர்கள் ஆனவர்கள் தான். அந்த வகையில் தற்போது இவர்கள் இருவரும் தங்களுடன் கல்லூரியில் படித்த நண்பர்களுடன் ஒன்றாக விருந்து ஒன்றில் சந்தித்துக்கொண்டு தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழந்துள்ளனர். இவர்களது கல்லூரி நண்பர்களில் ஒருவர் இந்த புகைப்படத்தை தனது சோசியல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டு, “நீண்ட நாளைக்கு பிறகு பசங்க எல்லாம் ஒன்று கூடி இருக்கிறோம்” என்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.