'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழில் கஜேந்திரா, குஸ்தி, சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சி, நானே என்னுள் இல்லை, கனகவேல் காக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் புளோரா. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரை காதலித்தார்.
இந்த நிலையில் அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் புளோரா. அதில் அவர் கூறியிருப்பதாவது: 20 வயதில் சினிமாவில் உயர்ந்த நிலையில் இருந்தேன். ஹிந்தியில் 10 படங்களுக்கு மேல் நடித்தேன், விளம்பரங்களிலும் நடித்தேன். பின்னர் ஒரு தயாரிப்பாளரிடம் காதலில் விழுந்ததால் எனது வாழ்க்கை மாறிப்போனது. அவர் என்னை அடித்து துன்புறுத்த தொடங்கினார். எனது அந்தரங்க உறுப்புகளில் அடித்து காயப்படுத்தினார். என் செல்போனை பறித்து கொண்டு நான் சீரியல்களில் நடித்து வந்ததை தடுத்தார்.
14 மாதங்களாக என்னை வீட்டுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்தார். அவரிடமிருந்து தப்பி என் தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். இப்போதுதான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளேன். தற்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். என் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்திச் செல்ல கற்றுக் கொண்டுவிட்டேன். இனி படங்களில் தீவிரமாக நடிப்பேன்.
இவ்வாறு அவர் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.