தங்கலான் படப்பிடிப்பிற்கு பிறகு 5 வித மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றேன் : மாளவிகா மோகனன் | 'கொட்டுக்காளி' விருதுக்காக எடுக்கப்பட்ட படமா? - இயக்குனர் விளக்கம் | குழந்தை நட்சத்திரங்கள் வளர காத்திருந்தது ஏன்? - ஹலிதா ஷமீம் விளக்கம் | இரண்டே மாதத்தில் முடிந்த ரியோ படம் | அடுத்த வாரம் 7 படங்கள் ரிலீஸ் | தெருக்கூத்து கலைஞராக நடிக்கும் சேத்தன் | முடிந்தால் என்னை தடுங்கள் : தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு விஷால் சவால் | பெயரை மாற்றிய இயக்குனர் பூரி ஜெகன்நாத் மகன் | பத்து வருட தவத்திற்கு இரட்டிப்பாக கிடைத்த மகிழ்ச்சி : ஜூலியின் பதிவு | பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் ஏன் நடிக்கவில்லை? - சுஜிதா விளக்கம் |
இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களில் ஹாரர் காட்சிகளுடன் காமெடியும் கலந்திருக்கும். அந்த வகையில் வெளியான அரண்மனை அடுத்தடுத்த படங்கள் வெற்றியை பெற்றது.
இந்த படங்களுக்கு பிறகு சுந்தர் சி, 'காபி வித் காதல்' படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் போதிய வெற்றியை பெறவில்லை. இதையடுத்து 'அரண்மனை 4' படத்தை சுந்தர் சி இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான பணிகளில் சுந்தர் சி ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் நடிகர் சந்தானமும், இயக்குனர் சுந்தர் சியும் இணைந்து தங்களது பிறந்தநாளை கொண்டாடினர். இந்த நிகழ்வில் முக்கியமாக நடிகர் விஜய் சேதுபதி கலந்துக் கொண்டார். இது 'அரண்மனை 4' படத்தை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தற்போது 'அரண்மனை 4' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், சந்தானம் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது . லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் .