25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
மகேஷ்பாபு நடிக்கும் அவரது 28 வது படத்தை இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கி வருகிறார். இந்த படம் கடந்த வருடமே வெளியாகி இருக்க வேண்டிய நிலையில் மகேஷ்பாபு குடும்பத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த சோகமான நிகழ்வு உள்ளிட்ட சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போனது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் நாகவம்சி ஜனவரி 18ல் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் ஆகஸ்ட் 11ல் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள புட்டபொம்மா என்கிற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது இந்த அறிவிப்பை வெளியிட்ட இவர், இந்த படத்தின் பூஜா ஹெக்டே உடன் நடிகை ஸ்ரீ லீலாவும் இன்னொரு கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்கிற தகவலையும் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல ஸ்ரீ லீலா இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகி அல்ல என்றும் பூஜாவும் ஸ்ரீ லீலாவும் சம முக்கியத்துவம் உள்ள இரண்டு கதாநாயகிகளாக நடிக்கின்றனர் என்பதையும் அழுத்தமாக கூறியுள்ளார். இதற்கு முன்னதாக இந்த படத்தில் நடிகை சம்யுக்தா மேனன் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் அவருக்கு பதிலாக தான் ஸ்ரீ லீலா இந்த படத்தில் நுழைந்துள்ளார். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்ற பெல்லி சந்தடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ரீ லீலா கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான தமாக்கா படத்தில் ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.