மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

ஆமென், அங்காமலி டைரீஸ், ஈ.மா.யூ, ஜல்லிக்கட்டு, சுருளி படங்களை இயக்கியவர் லிஜோ ஜோஸ். தற்போது மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கி வருகிறார். அடுத்து அவர் மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.
லிஜோ ஜோஸ் - மோகன்லால் இணையும் படத்திற்கு 'மலைக்கோட்டை வாலிபன்' என பெயரிடப்பட்டுள்ளது. இதனை மோகன்லால் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இப்பட்டத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. இப்படத்தில் மோகன்லால் மல்யுத்த வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படமும் மலையாளம், தமிழில் தயாராகிறது. படத்தின் தலைப்பும் நண்பகல் நேரத்து மயக்கம் போன்று பக்காவான தமிழில் வைக்கப்பட்டுள்ளது.




