பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
ஆமென், அங்காமலி டைரீஸ், ஈ.மா.யூ, ஜல்லிக்கட்டு, சுருளி படங்களை இயக்கியவர் லிஜோ ஜோஸ். தற்போது மம்முட்டி நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கி வருகிறார். அடுத்து அவர் மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.
லிஜோ ஜோஸ் - மோகன்லால் இணையும் படத்திற்கு 'மலைக்கோட்டை வாலிபன்' என பெயரிடப்பட்டுள்ளது. இதனை மோகன்லால் தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். இப்பட்டத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. இப்படத்தில் மோகன்லால் மல்யுத்த வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படமும் மலையாளம், தமிழில் தயாராகிறது. படத்தின் தலைப்பும் நண்பகல் நேரத்து மயக்கம் போன்று பக்காவான தமிழில் வைக்கப்பட்டுள்ளது.