'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
முன்னணி நடிகை பாவனா தனது சொந்த வாழ்வில் நடந்த சில சோகமான பிரச்சினைகள் காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்நு'. படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் தொடர்பான ஒரு நேர்காணனில் சைபர் க்ரைம் குறித்து அவர் பேசியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: மீண்டும் சினிமாவில் நடிக்க கூடாது என்றுதான் முடிவு செய்திருந்தேன். சினிமாதான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது, என்னிடமிருந்து எல்லாவற்றையும் பறித்தது. மீண்டும் சினிமாவுக்கு வந்தால் மன அமைதி போய்விடும் என்று நினைத்தேன். என் நட்புகள் என்னை மீண்டும் அழைத்து வந்திருக்கின்றன.
எனக்கு எதிராக சைபர் தாக்குதல்கள் அதிகம் நடந்தன. இணையதளம் மூலம் பிறரை மிரட்டுவது, புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவது இன்று தொழிலாகி விட்டது. வேலைக்கு ஆட்களை அமர்த்தி இதை செய்கிறார்கள். இவரைத் தாக்க வேண்டும். அந்தப் படத்தை மோசமாக விமர்சிக்க வேண்டும் என்று அதற்காகப் பணம் செலவழித்து வருகிறார்கள். எனக்கு தெரிந்தவர்களே, எனக்கு எதிரான வேலைகளைச் செய்தார்கள். எனது கடினமான காலகட்டத்தில் என் முதுகுக்குப் பின்னால் பேசியவர்களை நான் மறந்துவிடவில்லை.
இவ்வாறு பாவனா கூறியுள்ளார்.