காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

புஷ்கர், காயத்ரி தயாரிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான வெப் தொடர் வதந்தி. இந்த தொடரின் நாயகியின் பெயர் வெலோனி. அழகு நிறைந்த 20 வயது இளம் பெண் வெலோனி மர்மமான முறையில் கொல்லப்பட்டு ஒரு திறந்த வெளியில் கிடக்க அவளை கொன்றவர் யார்? என்பதை சப் இன்ஸ்பெக்டர் எஸ்.ஜே.சூர்யா கண்டுபிடிப்பதுதான் கதை. இந்த கதையின் வாயிலாக வெலோனியின் வாழ்க்கை சொல்லப்படுகிறது. தொடர் பிரபலமானதை போன்றே அதில் வெலோனியாக நடித்த சஞ்சனா கிருஷ்ண மூர்த்தியும் வெளிச்சத்துக்கு வந்திருகிறார்.
சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஊட்டி. படுகா இனத்தை சேர்ந்தவர். பிறந்தது ஊட்டியாக இருந்தாலும் வளர்ந்தது, படித்தது சென்னையில். படித்துக் கொண்டே யு டியூப் சேனல்களின் ஒளிபரப்பான சிறு தொடர்களில் நடித்தார். இதன் மூலம் யு டியூப் ஏரியாவில் பிரபலமானார். அந்த யு டியூப் தொடர்களை கவனித்த இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் அழைத்து வந்த வெலோனி ஆக்கிவிட்டார்.
“யூடியூபில் நடிப்பு என்று இறங்கியபோது அப்பா, அம்மா விரும்பவில்லை.. ஆனால், 'வதந்தி' வலைத் தொடருக்கான வாய்ப்பு வந்தபோது, கதையையும் எனது கதாபாத்திரத்தையும் அவர்களுக்குச் சொன்னேன். இது சாதாரண வாய்ப்பு இல்லை என்பதால் ஓகே சொல்லிவிட்டார்கள். அவர்களின் ஆசீர்வாதத்துடன் நடிக்க வந்திருக்கிறேன். தொடர்ந்து நடிப்பேன்” என்கிறார் சஞ்சனா.




