தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
புஷ்கர், காயத்ரி தயாரிப்பில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளியான வெப் தொடர் வதந்தி. இந்த தொடரின் நாயகியின் பெயர் வெலோனி. அழகு நிறைந்த 20 வயது இளம் பெண் வெலோனி மர்மமான முறையில் கொல்லப்பட்டு ஒரு திறந்த வெளியில் கிடக்க அவளை கொன்றவர் யார்? என்பதை சப் இன்ஸ்பெக்டர் எஸ்.ஜே.சூர்யா கண்டுபிடிப்பதுதான் கதை. இந்த கதையின் வாயிலாக வெலோனியின் வாழ்க்கை சொல்லப்படுகிறது. தொடர் பிரபலமானதை போன்றே அதில் வெலோனியாக நடித்த சஞ்சனா கிருஷ்ண மூர்த்தியும் வெளிச்சத்துக்கு வந்திருகிறார்.
சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஊட்டி. படுகா இனத்தை சேர்ந்தவர். பிறந்தது ஊட்டியாக இருந்தாலும் வளர்ந்தது, படித்தது சென்னையில். படித்துக் கொண்டே யு டியூப் சேனல்களின் ஒளிபரப்பான சிறு தொடர்களில் நடித்தார். இதன் மூலம் யு டியூப் ஏரியாவில் பிரபலமானார். அந்த யு டியூப் தொடர்களை கவனித்த இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் அழைத்து வந்த வெலோனி ஆக்கிவிட்டார்.
“யூடியூபில் நடிப்பு என்று இறங்கியபோது அப்பா, அம்மா விரும்பவில்லை.. ஆனால், 'வதந்தி' வலைத் தொடருக்கான வாய்ப்பு வந்தபோது, கதையையும் எனது கதாபாத்திரத்தையும் அவர்களுக்குச் சொன்னேன். இது சாதாரண வாய்ப்பு இல்லை என்பதால் ஓகே சொல்லிவிட்டார்கள். அவர்களின் ஆசீர்வாதத்துடன் நடிக்க வந்திருக்கிறேன். தொடர்ந்து நடிப்பேன்” என்கிறார் சஞ்சனா.