ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
பேஷன் உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் சஞ்சனா நடராஜன். 'நெருங்கி வா முத்தமிடாதே' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு இறுதிச்சுற்று, ஜெகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை, ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ், படங்களில் தனித்துவமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்தார். சமீபத்தில் அவர் நடித்த 'பாட்டல் ராதா' படம் வெளிவந்தது. இந்த படத்தில் அவர் குரு சோமசுந்தரத்தின் மனைவியாக முதன் முதலாக படத்தின் நாயகியாக நடித்தார். படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எனது சமீபத்திய படமான 'பாட்டல் ராதா'வுக்குக் குவிந்துள்ள அன்பிற்கும் பாராட்டுக்களுக்கும் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். 'அஞ்சலம்' கேரக்டரில் நடித்தது ஒரு அபாரமான பயணமாக அமைந்தது, அழகாக, நேர்த்தியாக, இயல்பாக எழுதப்பட்ட பாத்திரத்தில் நடிக்க என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் தினகரன் சிவலிங்கத்திற்கும், மற்ற படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். ரசிகர்களின் ஊக்கம் எனது ஆர்வத்தைத் தூண்டுகிறது, மேலும் எதிர்காலத்தில் அதிக உள்ளடக்கம் மற்றும் உயர்தர சினிமாவின் ஒரு பகுதியாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.