நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
பேஷன் உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் சஞ்சனா நடராஜன். 'நெருங்கி வா முத்தமிடாதே' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு இறுதிச்சுற்று, ஜெகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை, ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ், படங்களில் தனித்துவமான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்தார். சமீபத்தில் அவர் நடித்த 'பாட்டல் ராதா' படம் வெளிவந்தது. இந்த படத்தில் அவர் குரு சோமசுந்தரத்தின் மனைவியாக முதன் முதலாக படத்தின் நாயகியாக நடித்தார். படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: எனது சமீபத்திய படமான 'பாட்டல் ராதா'வுக்குக் குவிந்துள்ள அன்பிற்கும் பாராட்டுக்களுக்கும் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். 'அஞ்சலம்' கேரக்டரில் நடித்தது ஒரு அபாரமான பயணமாக அமைந்தது, அழகாக, நேர்த்தியாக, இயல்பாக எழுதப்பட்ட பாத்திரத்தில் நடிக்க என் மீது நம்பிக்கை வைத்த இயக்குனர் தினகரன் சிவலிங்கத்திற்கும், மற்ற படக்குழுவினர் மற்றும் ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். ரசிகர்களின் ஊக்கம் எனது ஆர்வத்தைத் தூண்டுகிறது, மேலும் எதிர்காலத்தில் அதிக உள்ளடக்கம் மற்றும் உயர்தர சினிமாவின் ஒரு பகுதியாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.