ஹிந்தி பட வசூலில் நம்பர் 1 சாதனை புரிந்த 'ஸ்திரீ 2' | தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை | ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியின் 4வது இசை வெளியீடு | மழைக்காலத்தில் சிக்குகிறதா 'கங்குவா'? | நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் |
நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி கன்னட சினிமாவில் நடித்து வருகிறார். கன்னட சினிமாவை உலுக்கிய போதை மருந்து வழங்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகி படங்களில் நடித்து வருகிறார். வழக்கும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை அதிகமாக இருப்பதாக கர்நாடக மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் மனு கொடுத்துள்ளார். மகளிர் ஆணைய தலைவியை சந்தித்து நேரில் புகார் மனு கொடுத்த அவர் பின்னர் நிருபர்களிடம் பேசும்போது :
“கன்னட திரையுலகில் பெண் கலைஞர்களுக்கான தனிப்பட்ட சுதந்திரமான அமைப்பு இல்லை. எனது அறக்கட்டளையான சஞ்சனா கல்ராணி அறக்கட்டளையில் இருந்து, தனியாக சுதந்திரமான அமைப்பை உருவாக்குவோம். இதனால் திரைத்துறையில் நுழையும் புதுமுகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். மேலும், 'சாண்டல்வுட் வுமன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன்' என்ற அமைப்பை உருவாக்குவதன் மூலம் கன்னட திரைத்துறையில் பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்த முடியும்” என்றார்.