கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி கன்னட சினிமாவில் நடித்து வருகிறார். கன்னட சினிமாவை உலுக்கிய போதை மருந்து வழங்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுதலையாகி படங்களில் நடித்து வருகிறார். வழக்கும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை அதிகமாக இருப்பதாக கர்நாடக மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் மனு கொடுத்துள்ளார். மகளிர் ஆணைய தலைவியை சந்தித்து நேரில் புகார் மனு கொடுத்த அவர் பின்னர் நிருபர்களிடம் பேசும்போது :
“கன்னட திரையுலகில் பெண் கலைஞர்களுக்கான தனிப்பட்ட சுதந்திரமான அமைப்பு இல்லை. எனது அறக்கட்டளையான சஞ்சனா கல்ராணி அறக்கட்டளையில் இருந்து, தனியாக சுதந்திரமான அமைப்பை உருவாக்குவோம். இதனால் திரைத்துறையில் நுழையும் புதுமுகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். மேலும், 'சாண்டல்வுட் வுமன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன்' என்ற அமைப்பை உருவாக்குவதன் மூலம் கன்னட திரைத்துறையில் பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பில் கவனம் செலுத்த முடியும்” என்றார்.




