சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு | நிஜ வாழ்க்கையில் நடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை! : சொல்கிறார் பார்வதி | நாகசைதன்யா 24வது படத்தில் மீனாட்சி சவுத்ரி முதல் பார்வை வெளியீடு | மீண்டும் ஒரு அதிரடி, மாஸ் என்டர்டெயின் படம் : விஷால் | ஜாய் கிரிசில்டா உடன் திருமணம், குழந்தை : ஒப்புக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் | 2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே… | சாமியாரான பாலிவுட் நடிகை |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கன்னடத்தில் வெளிவந்து மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு 400 கோடியை வசூலித்த படம் 'காந்தாரா'. இப்படம் சில தினங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டர்களில் படத்தைப் பார்க்காதவர்கள் தற்போது ஓடிடி தளத்தில் படத்தைப் பார்த்து தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
'காந்தாரா' படம் வெளியான அதே தினத்தில் தமிழில் வெளிவந்து 500 கோடிக்கும் அதிக வசூலைக் குவித்த படம் 'பொன்னியின் செல்வன்'. அப்படத்தின் கதாநாயகியாக திரிஷா தற்போதுதான் 'காந்தாரா' படத்தைப் பார்த்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் 'வராஹரூபம்' பாடல் காட்சியைப் பதிவு செய்து 'ப்ப்ப்ப்ப்பா……தலை வணங்குகிறேன்' என படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி, கதாநாயகி சப்தமி கவுடா, கிஷோர், மானஸி சுதிர் ஆகியோரை டேக் செய்து பதிவிட்டுள்ளார். 
ஓடிடியில் வெளியான பின்னும் 'காந்தாரா' படம் தியேட்டர்களில் இன்னமும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.