கர்நாடகா சினிமா டிக்கெட் : நீதிமன்றம் இடைக்காலத் தடை | ‛சேட்டான்'கள் செய்த சேட்டை, பூட்டானிலிருந்து சட்டவிரோத கார் இறக்குமதி : மாட்டுகிறார்கள் மலையாள நடிகர்கள் | 'காந்தாரா' பார்க்கும் முன் அசைவம் சாப்பிடக்கூடாதா?: ரிஷப் ஷெட்டி விளக்கம் | சக்திமான் கதைக்காக 2 வருடத்தை வீணாக்கிய பஷில் ஜோசப் | மேலாளார் தாக்கப்பட்ட வழக்கு : நேரில் ஆஜராக உன்னி முகுந்தனுக்கு நீதிமன்றம் சம்மன் | 'ஓஜி' புரமோஷன் நிகழ்ச்சியில் பவன் கல்யாணின் வாள்வீச்சில் இருந்து மயிரிழையில் தப்பிய பாதுகாவலர் | தாதா சாஹேப் பால்கேவுக்கு மோகன்லால் விருது வழங்கப்பட வேண்டும் : ராம் கோபால் வர்மா | மோடியாக நடிக்கும் உன்னி முந்தனுக்கு உடனடியாக ஹிந்தியில் ஒப்பந்தமான இரண்டு படங்கள் | ஆயிரம் கோடி டார்கெட்டில் காந்தாரா | தமிழில் வெளியாகும் புதிய அனகோண்டா |
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கன்னடத்தில் வெளிவந்து மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு 400 கோடியை வசூலித்த படம் 'காந்தாரா'. இப்படம் சில தினங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டர்களில் படத்தைப் பார்க்காதவர்கள் தற்போது ஓடிடி தளத்தில் படத்தைப் பார்த்து தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
'காந்தாரா' படம் வெளியான அதே தினத்தில் தமிழில் வெளிவந்து 500 கோடிக்கும் அதிக வசூலைக் குவித்த படம் 'பொன்னியின் செல்வன்'. அப்படத்தின் கதாநாயகியாக திரிஷா தற்போதுதான் 'காந்தாரா' படத்தைப் பார்த்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் 'வராஹரூபம்' பாடல் காட்சியைப் பதிவு செய்து 'ப்ப்ப்ப்ப்பா……தலை வணங்குகிறேன்' என படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி, கதாநாயகி சப்தமி கவுடா, கிஷோர், மானஸி சுதிர் ஆகியோரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
ஓடிடியில் வெளியான பின்னும் 'காந்தாரா' படம் தியேட்டர்களில் இன்னமும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.