புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
வரும் சனிக்கிழமை (நவ.,26) மாலை 6 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமி மெயின் ஹாலில் ‛ஸ்ரீ ஆண்டாள்' என்னும் நடன நாடக நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் தயாரிப்பு மற்றும் இசையில், ஆண்டாள் வரதராஜன் எழுதிய பாடலை இளையராஜா, யுவன்சங்கர் ராஜா, பவதாரணி, நிவாஸ் உள்ளிட்டோர் பாடியுள்ளனர். இவர்களுடன் பி.எஸ்.பி.பி பள்ளி மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் சேர்ந்து பாடியுள்ளனர்.
நிகழ்ச்சி குறித்து கார்த்திக் ராஜா கூறுகையில், ‛ஆண்டாளின் கதையை அழகாக நடனத்தின் மூலம் வெளிப்படுத்த ஆசைப்பட்டோம். ரொம்ப நல்லா வந்திருக்கு' மக்கள் அனைவரும் வந்து இந்த நாட்டிய நாடகத்தை பார்த்து மகிழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்