மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

53வது சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று தொடங்கியது. வருகிற 28ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் 79 நாடுகளை சேர்ந்த 280 படங்கள் திரையிடப்படுகிறது. நேற்று நடந்த துவக்க விழாவில் நடிகர்கள் அஜய் தேவ்கன், வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் பாஜ்பாய், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி மற்றும் நடிகை சாரா அலிகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய மந்திரி அனுராக் தாக்குர் விழாவை முறைப்படி துவக்கி வைத்தார். மத்திய அமைச்சர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் ஆண்டுதோறும் சிறந்த சினிமா ஆளுமைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனையாளர் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு அந்த விருதினை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பெறுகிறார். இதனை மத்திய தகவல் மற்றும் செய்திதுறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் இந்த விருதை வகீதா ரகுமான், ரஜினிகாந்த், இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், அமிதாப் பச்சன், சலிம்கான், பிஸ்வஜித் சட்டர்ஜி, ஹேமமாலினி, பரசூன் ஜோஷி ஆகியோர் பெற்றுள்ளனர்.