திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ஹரி இயக்கிய யானை படத்தை அடுத்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்திருக்கிறார் அருண் விஜய். இந்த நிலையில் நேற்று அவர் தனது 45வது பிறந்த நாளை சென்னையில் உள்ள உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அதோடு அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கியதோடு தானும் மதிய உணவை அந்த குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறார் அருண் விஜய்.
மேலும் நேற்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த தானமும் செய்திருக்கிறார் அருண் விஜய். அவர் மட்டுமின்றி அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்ததானம் செய்துள்ளார்கள். ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து அருண் விஜய் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.