Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சங்க கட்டிடம் முடித்த பின்பே திருமணம் : உறுதியாய் நிற்கும் விஷால்

14 நவ, 2022 - 12:01 IST
எழுத்தின் அளவு:
Vishal-sure-that-his-marriage-will-happend-after-the-nadigar-sangam-building-completed

சென்னை தான் ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவுக்கெல்லாம் தலைநகரமாய் இருந்தது. 80களுக்குப் பின்னர்தான் கொஞ்சம் கொஞ்சமாக தங்களது மொழி பேசும் மாநிலங்களுக்கு தெலுங்கு, கன்னடம், மலையாள சினிமாக்கள் மாறின. எம்ஜிஆர் முன்னணி நடிகராக இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கம், இப்போதும் அதே பெயரில்தான் இயங்கி வருகிறது. மற்ற மொழி நடிகர் சங்கங்கள் அவர்களது மொழி சினிமாவுக்காக தனித் தனியே இயங்கினாலும், தமிழ் சினிமாவில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரே நிலைத்து நிற்கிறது.

பல சர்ச்சைகளுக்கு இடையே வழக்குகள், விசாரணைகள், நீதிமன்றத் தீர்ப்பு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தில் நாசர் தலைமையிலான குழுவினர் மீண்டும் வெற்றி பெற்று பொறுப்பை ஏற்றார்கள். அவர்கள் முதல் முறை பொறுப்பில் இருந்த போதே சென்னை, தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய பிரம்மாண்டக் கட்டிடத்தை கட்டும் வேலைகளை ஆரம்பித்தார்கள். பாதி கட்டிடம் வளர்ந்த நிலையில் கடந்த சில வருடங்களாக கட்டுமானப் பணி தடைபட்டு நிற்கிறது. இப்போது மீண்டும் அதன் வேலைகளை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

நடிகர் சங்கக் கட்டிடம் கட்டும் பணி முடிந்த பிறகுதான் தனது திருமணம் நடக்கும் என்பதில் அதன் செயலாளர் விஷால் மீண்டும் உறுதியாகத் தெரிவித்துள்ளார். நேற்று ஐதராபாத்தில் அவருடைய 'லத்தி' படத்தின் டீசர், முதல் சிங்கிள் வெளியீட்டு நிகழ்வில் பேசிய விஷால், “தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடம் கட்டிய பிறகு வரும் முதல் முகூர்த்தத்தில் நான் திருமணம் செய்து கொள்வேன். 3500 நடிகர்கள், நாடகக் கலைஞர்கள் வாழ்க்கைக்கு நல்லது செய்ய வேண்டும் என எனது குழுவினர் உழைத்து வருகிறார்கள். அவர்களது வாழ்க்கைத் தரம் உயர உழைத்து வருகிறோம். அவர்களுக்கு மருத்துவ வசதி, இன்ஷுரன்ஸ் வசதிகள் கிடைக்க வேண்டும். கட்டிடம் முடிந்து திருமணம் நடக்கும் போது அனைவரையும் அழைப்பேன்,” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற விழாவில் ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத், 'வலிமை' வில்லன் கார்த்திகேயா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, தயாரிப்பாளர்கள் ராணா, நந்தா, படத்தின் கதாநாயகி சுனைனா, மதுமிதா அவரது கணவர் நடிகர் சிவபாலாஜி, அபிநயா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கார்த்தியின் பேஸ்புக் பக்கம் 'ஹேக்டு'கார்த்தியின் பேஸ்புக் பக்கம் ... அவதூறு பரப்பினால் நடிவடிக்கை பாயும்: பார்வதி நாயர் எச்சரிக்கை அவதூறு பரப்பினால் நடிவடிக்கை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in