20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. சுகுமார் இயக்கிய இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்து இருந்தார். இப்படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.
'புஸ்பா- தி ரூல்' என தலைப்பு வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக தாமதமாகி வந்தன. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க படக்குழு முடிவு செய்ததாலும், திரைக்கதை இன்னும் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த தாமதம் என்கிறார்கள்.
இந்த நிலையில் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தின் பாங்காக் பகுதியில் அடுத்த வாரம் துவங்க உள்ளதாம். பாங்காக்கை சுற்றியுள்ள அடர்ந்த காட்டு பகுதியில் படத்தின் படப்பிடிப்பு மூன்று வாரங்களுக்கு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.