இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. சுகுமார் இயக்கிய இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்து இருந்தார். இப்படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.
'புஸ்பா- தி ரூல்' என தலைப்பு வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக தாமதமாகி வந்தன. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க படக்குழு முடிவு செய்ததாலும், திரைக்கதை இன்னும் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த தாமதம் என்கிறார்கள்.
இந்த நிலையில் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தின் பாங்காக் பகுதியில் அடுத்த வாரம் துவங்க உள்ளதாம். பாங்காக்கை சுற்றியுள்ள அடர்ந்த காட்டு பகுதியில் படத்தின் படப்பிடிப்பு மூன்று வாரங்களுக்கு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.