மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் |

மதராசபட்டினம் படத்தில் நடித்த லண்டன் மாடல் அழகியான எமி ஜாக்சன். அதன்பிறகு தென்னிந்திய படங்கள், பாலிவுட் படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து விட்டு மீண்டும் லண்டனில் செட்டிலாகிவிட்டார். அங்கு திருமணம் செய்யாமலேயே குழந்தையும் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் அவரை மீண்டும் அழைத்து வந்திருக்கிறார் அறிமுகப்படுத்திய ஏ.எல்.விஜய். அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் அருண் விஜய் ஜோடியாக நடிக்கிறார். நிவீஷா விஜயன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் லண்டனில் முடிவடைந்து விட்ட நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது.
படப்பிடிப்புக்காக சுமார் 3 கோடி செலவில் லண்டன் சிறை ஷெட் போடப்பட்டிருப்பதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. சென்னையின் பின்னி மில்ஸ் பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் கலை இயக்குநர் சரவணன் நூற்றுக்கணக்கான வேலைப்பாடுகள் மற்றும் ஆட்களுடன் லண்டன் சிறையை மறு உருவாக்கம் செய்திருக்கிறார். இந்த ஷெட்யூலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டைச் சேர்ந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இதில் பங்கேற்க இருக்கின்றனர். இவர்களுடன் அருண் விஜய் பங்கேற்கக் கூடிய ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. 4 வருடங்களுக்கு பிறகு தமிழ் மண்ணில் மீண்டும் நடிக்கிறார் எமி ஜாக்சன்.
பணி நிமித்தமாக லண்டன் செல்லும் அருண் விஜய் அங்கு எமி ஜாக்சனை சந்தித்து காதல் கொள்கிறார். லண்டனில் ஒரு சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டு சிறை செல்லும் அருண் விஜய்யை, எமி ஜாக்சன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை என்கிறார்கள். லண்டன் நகரில் அருண் விஜய், எமி காதல் காட்சிகள், சண்டை காட்சிகள் படமாகி விட்டது. லண்டன் சிறையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்காததால் சென்னையில் ஷெட் போட்டு படமாக்குவதாக கூறப்படுகிறது.