ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

மேயாதமான் படத்தில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்தவர் இந்துஜா. சமீபத்தில் வெளியான நானே வருவேன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் “நான் நடித்த படங்களிலேயே மோசமானது பில்லா பாண்டி என்ற படம்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த படத்தை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தயாரித்து, அவரே நாயகனாகவும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் 'காலங்களில் அவள் வசந்தம்' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்.கே.சுரேஷ் இந்துஜாவின் இந்த கருத்து குறித்து வெளிப்படையாக பேசினார். அவர் பேசியதாவது: நடிகை இந்துஜா நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார். அந்த நேர்காணலில் இந்துஜாவிடம், 'நீங்கள் நடித்ததிலேயே மோசமான படம் எது?' என கேள்வி கேட்கிறார்கள். அதற்கு அவர், ''பில்லா பாண்டி'' என கூறியிருக்கிறார்.
'பில்லா பாண்டி' படத்தில் நான் தான் அவரை அறிமுகப்படுத்தினேன். அவருக்கு அது தான் முதல் படம். அப்போது தொடர்ந்து 4 படங்கள் என்னுடைய ஸ்டூடியோ 9 தயாரிப்பு நிறுவனத்தில் ஒப்பந்தமானார். பில்லா பாண்டி நல்ல கதைக்களம் கொண்ட படம். எனக்கு மிகவும் பிடித்த படம். இந்துஜாவிற்கு அப்படி இருக்க வேண்டும் என அவசியமில்லை.
நாம் எந்த இடத்தில் இருந்து வந்தோமோ அதை நான் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. ஏற்றிய ஏணியை மறந்துவிடக்கூடாது. சினிமா ஒரு பெரிய வட்டம். ஒரு ராட்டினம் போல சுற்றி கீழே வந்துவிடும். அதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.




