மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகள் அண்மையில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகினர். இதுகுறித்து சோஷியல் மீடியாக்களில் பலவித விவாதங்கள் எழுந்துள்ளது. வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்தது. ஆனால் அது உரிய சட்டமுறை விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என விசாரணை கமிஷன் அளவுக்கு இந்த விஷயம் பேசு பொருளாகி உள்ளது. நயன்தாராவுக்கு ஆதரவாக பலரும் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக நடிகை வனிதா சமீபத்தில் ‛‛பெற்றோர்களுக்கு தங்கள் அழகான குழந்தைகளின் பிறப்பை விட அழகான தருணம் என்ன இருக்க முடியும். ஒருவர் வாழ்க்கையின் மகிழ்வான தருணங்களை கெடுப்பவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். லீகல் தெரியும், மருத்துவம் தெரியுமென்று சில கோமாளிகள் பேட்டி கொடுப்பதும், ட்வீட் போடுவதும் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா?'' என பதிவிட்டிருந்தார்.
அவரை போலவே நடிகை ரேஷ்மா பசுபலேட்டியும், 'இந்த உலகில் அடுத்தவர்களின் சந்தோஷத்தை பார்த்து சந்தோஷப்படுவபர்கள் இல்லாமல் போய்விட்டனர். குற்றம் சொல்வது, யூகித்துக் கொள்வது, அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி இன்பமடைவது இதுதான் தற்போது இந்த கொடூர உலகில் நடந்து கொண்டிருக்கிறது' என பதிவிட்டுள்ளார்.